ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு; இந்த இரண்டு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Madhu

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு; இந்த இரண்டு நாளை மிஸ் பண்ணிடாதீங்க!!

Madhu

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பல நாட்களுக்குப் பிறகு பாடங்களை படிக்க தற்போது தொடங்கியுள்ளனர். அதனால் ஆசிரியர்களின் பங்கு 

மிக முக்கிய ஒன்றாக மாறி உள்ளது. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை என தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருக்கின்றது. அதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாகவும் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. மேலும் ஆசிரியர்கள் வேலைக்காக சொந்த ஊரை விட்டு பல மாவட்டங்களைக் கடந்து வெளியே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அதனால் சொந்த மாவட்டம் அல்லது சொந்த மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத்தில் பணி மாறுதல் கேட்டு வரும் நிலையில் இணைய வழி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கல்வி ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் ஆதிதிராவிடர் நல ஆணையர் இது குறித்து கூறுகையில் இந்த கல்வியாண்டிற்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதாவிடர் நல நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆரம்பப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்சி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர், இடைநிலை ஆசிரியர் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.

காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் பணியிடம் மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.