இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

Photo of author

By Madhu

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

Madhu

தமிழகத்தில் வரும் 2027 முதல் தட்டச்சு தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் மற்றும் ஐந்து லட்சம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றது. இந்நிலையில் தட்டச்சு தேர்வுகள் பல ஆண்டுகளாக தட்டச்சு பொரியின் வாயிலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதலில் பள்ளிக்கல்வித்துறை தான் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

ஆனால் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தட்டச்சு சுருக்கு எழுத்து தேர்வுகளை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் சுமார் 5000 தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் 4000 தட்டச்சு பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அறிவுறுத்தலால் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இன்னும் சில தேர்வுகளுக்கு மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும். 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தின் மூலம் நடைபெறும் அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 5000 தட்டச்சு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சு பொறிகளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளும் உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவால் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் சென்னையில் வணிகவியல் பள்ளியல் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்க வேண்டும். COA கணினி தேர்வினை நடத்திடவும் குறைந்தபட்சம் கல்வி தகுதியான தட்டச்சு ஆங்கில மற்றும் தமிழில் இடைநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே இந்த தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் புதிய தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.