எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு!!

0
40

 

எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு…

 

நியூயார்க் நகரில் 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள் நியூயார்க் நகரின் மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என்று நடிகை சமந்தா அவர்கள் பேசியுள்ளார்.

 

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்கள் காநாயகியாக நடித்துள்ளார். குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் குஷி திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வந்தார்.

 

இதையடுத்து திடீரென்று நடிகை சமந்தா அவர்கள் குஷி திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் இருந்து விலகி நியூயார்க் கிளம்பி சென்றார். எதற்காக திடீரென்று நியூயார்க் சென்றுள்ளார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளத்தான் நடிகை சமந்தா நியூயார்க் சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

 

நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தியா டே பரேட் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா அவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரில் வாழும் இந்தியர்கள் சார்பில் நடிகை சமந்தா அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் கண்டு கொள்ளாமல் பேரணியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு நடிகை சமந்தா நடந்து சென்றார். நடிகை சமந்தாவிற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹிந்தி நடிகை ஜேக்குலின் பெர்ணன்டஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

 

இதையடுத்து அங்கு இருந்த மக்கள் மத்தியில் நடிகை சமந்தா அவர்கள் “இன்று(ஆகஸ்ட்22) நியூயார்க் நகரில் இந்த இடத்தில் இருப்பது மிகுந்த கௌரவம். இந்திய கலாச்சாரமும், இந்திய பாரம்பரியமும் எவ்வளவு சிறந்தது என்பதை இன்று நீங்கள் எனக்கு புரிய வைத்தீர்கள். இன்று(ஆகஸ்ட்22) இங்கு நான் பார்த்த ஒவ்வொரு கணமும் என் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நின்று விடும். இந்த நிகழ்ச்சியில் இந்த அரிய கௌரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொரு நபருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் என்னுடைய ரசிகர்களாகிய அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

 

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற இந்தியநாள் கொண்டாட்டத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.