வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்!

0
59
The actor who simply interpreted the viral video!
The actor who simply interpreted the viral video!

வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்!

தற்போதெல்லாம் சில வீடியோக்கள் மக்களுக்கு பிடித்து விட்டால், அதை வைரலாக பரவ வைத்து விடுகின்றனர். அதுபோல் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் விஜய் சேதுபதி. இவர் சில தினங்களுக்கு முன் பெங்களூர் விமான நிலையத்தில், அவரை ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மற்ற நடிகர்கள் எல்லாம் மக்களின் மனதில் இடம்பிடிக்க பல்வேறு முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் இவர் அப்படி எதுவும் செய்யாமலேயே மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதுவே இவருடைய இயல்புகளில் ஒன்றுதான்.

ஆனால் அவர் எதற்காக தாக்கினார் என்ற செய்தி அரசல் புரசலாக பலர் சொன்னாலும் உண்மையான காரணம் என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அது குறித்து விஜய் சேதுபதி கூறியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே இருந்தார். ஒரு சிறிய பிரச்சினைதான்.

அது சற்று பெரிதாகி விட்டது அவ்வளவுதான். தாக்கியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டது. அந்த நபர் குடி போதையில் இருந்துள்ளார். மேலும் அவர் முகக்கவசம் அணிந்து இருந்ததன் காரணமாக அவர் குடிபோதையில் இருந்தது எங்களுக்கு தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து எங்களுடன் வாக்குவாதம் செய்தார்.

விமானம் தரை இறங்கிய பிறகும் கூட வாக்குவாதம் தொடர்ந்தது. மேலும் அவர் எனது ரசிகர் இல்லை. இப்போதெல்லாம் செல்போன் வைத்திருக்கும் அனைவருமே இயக்குனர்கள் தான். நான் பாதுகாப்புக்கு என்று பலரை எப்போதும் உடன் அழைத்துச் செல்வதில்லை. அது என்னுடைய வழக்கம் தான். 30 வருடங்களாக என்னுடன் இருக்கும் எனது நெருங்கிய நண்பர்களைத் தான் நான் உடன் அழைத்துச் செல்வேன்.

மேலும் யாரும் நெருங்க முடியாதபடி பல பாதுகாவலர்களுடன் செல்ல நான் எப்போதும் விரும்புவதில்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும். அவர்களோடு பேச வேண்டும் அவர்களுக்குள் நானும் இருக்கவேண்டும் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.