மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அண்மையில் மத்திய அரசு 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது.
5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சீனியர் சிட்டிசன் செயலியை உருவாக்கி இருக்கின்றது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை மூத்த குடிமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மூத்த குடிமக்கள் நலன் கருதி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் அன்று வெளியிடப்பட்டு இந்த செயலை செயல்பாட்டிற்கு வந்தது.
இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றிருக்கின்றது. அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பற்றி அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன் பெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் சீனியர் சிட்டிசன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.