மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் வந்து உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையாக வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்க எந்தவித அதிகாரமும் கிடையாது.
அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதனால் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதாடினார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அதிக அளவில் பொதுமக்கள் கூட கூடிய மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்துவதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறைதான்.
அதனால் இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் இருக்கிறது என தெரிவித்தார். இந்த உத்தரவு என்பது மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை வாகனங்களையும் முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் நிற்கும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும், மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருப்பது அவசியம் என பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.