கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

0
74
The person who committed suicide by catching fire due to the series impact of Corona! Shocked family!
The person who committed suicide by catching fire due to the series impact of Corona! Shocked family!

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

எப்படியெல்லாம் உயிர் போகிறது பாருங்கள். கொரோனா வந்ததை தொடர்ந்து அவர் உடலில் பல நோய்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள்.

ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு, இந்திராநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியிலேயே சமையல் எண்ணெய் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணமடைந்ததை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டின் குளியல் அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு்க்கொண்டார். பின்னர் அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.