இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!!

0
94

 

இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…

 

இந்த முறை நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கின்றது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.

 

நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளது. நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் உலகக் கோப்பையை இந்திய அணா வெல்ல அதிக ஆதரவு கிடைக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் “ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை. இந்திய அணி 2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற பொழுது நான் அணியில் விளையாடவில்லை. ஆனால் அது மிக அழகான தருணம் ஆகும்.

 

உலகக் கோப்பையை வெற்றி பெறுவது என்பதன் பின்னணியில் நிறைய நினைவுகள் இருக்கின்றது. உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு மைதானத்திற்கும் செல்லும் பொழுதும் எங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு தெரியும். 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையும் ஆவலும் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணி தற்பொழுது நடக்கும் உலகக் கோப்பை தொடரில் வென்று கோப்பையை கைப்பற்றும் ஆவல் அனைவரிடமும் உள்ளது” என்று கூறினார்.

 

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது. அப்பொழுது இந்திய அணியில் சச்சின் டென்டுல்கர், விரேந்திர ஷேவாக், கவுதம் கம்பீர், ஜாஹீர் கான், முனப் பட்டேல் ஆகியோர் அணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.