நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

0
207
#image_title

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அவர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.

 

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று நடிகர் விஜய் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து இன்று அதாவது ஜூன் 17ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கண்வென்ஷன் மையத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

 

இந்த விழாவில் உரையாற்றிய பிறகு நடிகர் விஜய் அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் மாநில அளவில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த மாணவி நந்தினி அவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கினார். பின்பு சிறப்பு பரிசாக வைர நெக்லஸ் ஒன்றையும் மாணவி நந்தினி அவர்களுக்கு நடிகர் விஜய் வழங்கினார். இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வில் அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத் தொகை வழங்கி வருகிறார்.

 

இதற்கு முன்னர் கல்வி விருது விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய் அவர்கள் “படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சி இருக்கும். பணத்தை இழந்தாலும் குணத்தை இழக்கக் கூடாது. பெற்றோர் கண்காணிப்பில் இருந்து வெளியே செல்லும் பொழுது கிடைக்கும் சுதந்திரத்தை நன்கு பயன்படுத்துங்கள்.

 

சமூக வலைதளங்களில் இருந்து நிறைய தவறான செய்திகள் வருகின்றது. அதில் எதை எடுக்க வேண்டும். எதை எடுக்ககூடாது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

 

பாடபுத்தகங்களை மட்டுமே படிப்பதை விட இதை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி படித்து மாணவ மாணவிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். புதிய புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம்முடைய விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் தற்போது நமக்கு நடந்து கொண்டிருக்கின்றது. அது என்ன என்றால் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது தான்.

 

ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்களுடைய பெற்றோர்களிடம் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடக்கூடாது என்று சொல்ல வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை. இது நடந்தால் மட்டுமே கல்விமுறை முழுமை அடைந்ததாக உணர முடியும்.

 

உங்கள் அருகில் இருக்கும் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு.

 

மாணவர்கள் யாரும் எந்தவொரு சூழ்நிலையிலும் தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். உங்களால் இது முடியாது என்று சொல்லும் கூட்டம் தனியாக இருக்கின்றது. அதை எல்லாம் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பேசியுள்ளார்.