இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

0
110
This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!
This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர்.

இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதிகள் இதனை காரணமாக எடுத்துக்கொண்டு ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றினால் அவர்களுக்கு வாரண்டி தரப்படாது என்ற வண்ணம் சட்டங்களை மாற்றுங்கள்.

அதனை உடனே செயலாற்றுங்கள் என்று ஆணை பிறப்பித்துள்ளார். வழக்கில் வாரண்டிக்கான புதிய விதிகளை உருவாக்கலாம். எனவும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் போக்குவரத்து ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நம் மக்கள் எப்போதும் தலைக்கவசம் உடன் வைத்து இருந்தால் கூட அதனை அணியாமல் போலீசாரை பார்த்தால்தான் போடுகிறார்கள். அவர்களது பாதுக்காப்புக்குத்தான் அதை அணிய சொல்கிரர்கள் என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை என்பதுதான் தெரியவில்லை.