பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகி உள்ளது. தற்போது மாணவர்கள் மேல்படிப்பிற்காக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில பள்ளிகள் திருத்தங்களை முறையாக மேற்கொள்ளாமல் உள்ளது. அதனால் தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழில் தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வு அல்லது பெயர், மொழிப்பாடம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 13ஆம் தேதிக்குள் இதனை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.