அரசு சுகாதார அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் உடனே முந்துங்கள்!

0
79

திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

1. கணக்கு உதவியாளர் – 1

கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர்

கல்வி தகுதி: பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

நகர்புற சுகாதார மேலாளர் / சுகாதார செவிலியர்

கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.25,000

நிபந்தனைகள்

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கௌரவ செயலாளர்/ துணை இயக்குனர்/ சுகாதாரப் பணிகள்/ மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம் செங்கம், சாலை திருவண்ணாமலை.

வேலையை சொல்லப்பட்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு 2-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன.

அதற்கு மேல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதோடு 5-12-2022 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.