அதிமுக கடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது வரும் 2026 தேர்தலில் வெற்றி அடைய தனது கட்சியை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருகின்றார். ஆனால் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது.
யார் அதிமுகவில் தலைவராக இருப்பார்கள் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகின்றார். 2026 தேர்தலுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாநகராட்சி 59 ஆவது வார்டு கவுன்சிலருமான எஸ் பி எஸ் ராஜா தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..
தனது சொந்த அக்காவிடம் நகை மற்றும் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ராஜா தனது சொந்த அக்காவிடம் மோசடியில் ஈடுபட்டதால் தான் எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்த பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது .