Breaking News

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தின் எதிரொலியாக 36 ரயித்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் 46 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே மூன்று இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெங்களூரூ – ஹவுரா விரைவு இரயில், சென்ன சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு இரயில் என மூன்று இரயில்களும் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட இரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்துள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவரமாக நடந்து வருகின்றது.

இதையடுத்து 43 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 36 இரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.