அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

Photo of author

By Madhu

அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!

Madhu

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் இருக்கின்றார். இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.

அவருக்கு வழி முழுவதும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். மேலும் இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் ,ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ வேலுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கப்பட்ட மரியாதையை விட அமைச்சர் எ.வ வேலுக்கு மயில்மாலை ,500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

மேலும் அமைச்சருடன் நின்று அவர்களுடன் குடும்பமே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பாக வீடியோ வைரலான நிலையில் பாரதிதாசன் தவெக நிர்வாகியா அல்லது திமுக நிர்வாகியா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தன் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அமைச்சர் எ.வ வேலுக்கு பணமழை போட்டு வரவேற்பு அளித்த தவெக நிர்வாகி விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக மட்டும் தான் என கூறியது அல்லாமல் நிகழ்ச்சிகளிலும் திமுக அரசையும், திமுக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெக மாவட்ட செயலாளரின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.