ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலால் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.