மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

Photo of author

By Madhu

மீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!

Madhu

DMK: தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஆட்சி மாற்றம் என்பது இந்த இரண்டு கட்சிக்கு இடையில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என மக்கள் மனதில் குழப்பமும் ஏற்படுகின்றது. இந்நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளது.

கட்சி தலைமையின் உத்தரவை அனைவரும் பின்பற்றி பணியாற்றி வருகின்றனர். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்து வந்த நிலையில் அவருடைய மறைவிற்குப் பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பதவி வகித்து வருகின்றார். ஆனால் இவர் முன்கூட்டியே கட்சியில் பணியாற்றி வரும் நிலையில் இளைஞர் அணி நிர்வாகி, துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.

மேலும் இவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் தயாரிப்பது மற்றும் திரைப்படங்களில் நடிப்பது என பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இவருடைய பிரச்சாரம் மக்களை கவர்ந்தது அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் இவருடைய பிரச்சாரத்திற்கு பரிசாக 2019 ஆம் ஆண்டு நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதால் ஓராண்டுக்கு பிறகு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சில மாதத்திலேயே துணை முதலமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த உடனே அடுத்தடுத்து பொறுப்புகள் உதயநிதிக்கு கிடைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உதயநிதிக்கு பதவி உயர்வு வழங்க திமுக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு பத்து மாதமே உள்ள நிலையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளராக பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் பரவி வருகின்றது. ஆனால் தற்போது திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ பெரியசாமி, ஆர் ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோர் இருக்கின்றனர். இதில் யாராவது ராஜினாமா செய்தால் மட்டுமே உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

திமுகவில் முழு நேர அரசியலில் இறங்கி கடந்த ஏழு வருடங்களுக்குள் இளைஞர் அணி செயலாளர் பதவி, அமைச்சர் பதவி மற்றும் துணை முதலமைச்சர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பெரிய பதவி வழங்குவதற்கு திமுகவின் மூத்த தலைவர்களுக்கு விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது. இன்னும் ஒரு வார காலகட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அந்தக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.