வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது இதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேத ஆச்சாரியர்கள் வேதங்களை ஓத மகா கலசத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

அதைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலிருந்து — வெள்ளை குதிரை பூட்டிய ரதத்தில் எல்லாம் வல்ல சிவபெருமான் மணக் கோலத்தில் எழுந்தருள , சிவபூதகண வாத்தியங்கள் முழங்க நையாண்டி மேளம் ஒலிக்க. தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள் ஓத, சாதுக்களும், சிவாச்சாரியார்களும் மற்றும் ஆயிரக்கணக்கான சிவன் அடிகளாரும் புடைசூழ. பல ஆயிரக்கணக்கான பெண்கள் சீர் வரிசையை ஏந்தி வந்து மும்முனி வேத வைத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்தனர். பின்பு இரவு 7 மணியளவில் திருக்கல்யாணமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

அதன் பின்னர் இரவு 9 மணி அளவில் வேத வைத்தீஸ்வரர் உடன் வேதவல்லி தாயாருடன் திருவீதி உலா நடந்தது.

Leave a Comment