வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!! 

0
84
Vande Bharat train collides with one person killed!! Vande Bharat accident which has caused shock among the people!!
Vande Bharat train collides with one person killed!! Vande Bharat accident which has caused shock among the people!!

வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!! 

வந்தே பாரத் இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ஒடிசா மாநிலத்தில் நடந்த இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் இரயில்கள் மோதிய விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் சோகம் இன்று வரை மகக்ளிடையே காணப்படுகின்றது. இந்த விபத்துக்கு பின்னர் பல இடங்களில் இரயில் விபத்துக்கள் நடக்க தொடங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சரக்கு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் இரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாவதாக தகவல்கள் கிடைக்கின்றது. இந்நிலையில் வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த பொழுது வந்தே பாரத் இரயிலில் ஒருவர் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலம் தண்ட்லா அருகே ஜலேசர் – போரா ஆகிய பகுதிகளுக்கு இடையில் நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் இரயிலில் மோதி மாடுகள் மற்ற விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.