விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு பக்கம் கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில் அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்குழுவை கூட்டி ஆதரவை திரட்டி வருகின்றார்.
மேலும் ராமதாஸ் ஆதரவாளர்களாக இருக்கும் எம்எல்ஏக்கள் ஜிகே மணி மற்றும் அருள் இருவரையும் அன்புமணி கிண்டல் செய்து பேசியிருக்கிறார். அவர்களின் உடல்நலம் விரைவாக குணமடைய அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் எனவும் அன்புமணி கூற அங்கிருந்து அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கியுள்ளனர்.
பாமகவில் ஏற்படும் பிளவு காரணமாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் உருவாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் விசிக திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார்
அப்பொழுது திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலும் விசிக வெளியேறும் என்பதை கூறி இருக்கின்றார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் பொழுது ராமதாஸ்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவருடைய கருத்து கொள்கை அதில், கருத்து சொல்வதற்கு நான் யார் ஒருவருக்கும் ஒரு கருத்துக் கொள்கை முரண்பாடு ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும் அதனை நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.