நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே பொது தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றது. அதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக தவெக சார்பாக மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இந்த விழாவானது மாமல்லபுரத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த விழா இன்று நடைபெறுகின்றது. இதில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி விஜய் கௌரவிக்க இருக்கின்றார். மேலும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடந்து முடிந்த உடனே பூத் கமிட்டி பணிகளை தீவிர படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து மாவட்ட ரீதியாக பூத் கமிட்டி லிஸ்ட்டை தயாரிக்க வேண்டும் என தவெக விஜய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தவெக கூட்டணி குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் விஜய் தற்போது பூத் கமிட்டி அமைக்க உத்தரவிட்டிருப்பது 2026 தேர்தல் களத்திற்கு விஜய் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.