விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

Photo of author

By Sakthi

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

Sakthi

விரதத்தின்போது வெறும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு உபவாசம் இருப்பதே உயர்வானது அவ்வாறு இருக்க இயலாதவர்கள் பாலும், பழமும், சாப்பிடலாம். சமஸ்கிருதத்தில் பல் என்றால் பழம் என்று அர்த்தம்.

ஆகார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்று பொருளாகும் பல்+ஆஹார்-பலஹார் என்றாகிறது அதோடு பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்றாகிவிட்டது.

இதற்கு பதிலாக சாதம் தவிர்த்த பலவிதமான ஆதாரங்களை சாப்பிடுவதுதான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இந்த காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு இது உண்மையான விரதம் ஆகாது என்று சொல்லப்படுகிறது.

ஜீரணத்தின் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து உடலை புதுப்பிப்பதுதான் விரதத்தின் நோக்கமாகவே கருதப்படுகிறது சிற்றுண்டிகளை சாப்பிட்டுவிட்டு விரதம் இருப்பதை விட பழங்களையும், பாலையும், மட்டும் சாப்பிட்டுவிட்டு விரதமிருப்பது சிறப்பாகும்.