பாகிஸ்தான் உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி! தொடரை வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ் அணி?

0
95

மேற்கண்ட தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆரம்பமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கொண்டு 25 ரன்னில் வெளியேறினார். அஷ்ரப் இருபத்தி ஆறு முப்பத்தி ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பாக கேமர் ரோச் 3 விக்கெட் வீழ்த்தினார், அதேபோல சிலர் 3 விக்கெட் வீழ்த்தினார், ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தன்னுடைய முதல் இன்னிங்சில் களம் இறங்கி விளையாடியது தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார்கள். மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து இருக்கிறது. பானர்18 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நடந்தது ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணியை சார்ந்தவர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். இதன் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் திணறிக் கொண்டு தான் இருந்தார்கள். கடைசியில் மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .அந்த அணியின் பானர் அதிகபட்சமாக 37 ரன்னும், பிளாக் வுட் 33 வேண்டும் ஹோல்டர் 26 ரன்னும், சேர்த்தார்கள்.பாகிஸ்தான் அணியின் சார்பாக சாகித் அப்ரிடி 6 விக்கெட்டும் முகமது அப்பாஸ் 3 விக்கெட்டும் அஷ்ரப் 1விக்கெட்டும் எடுத்தார்கள்.

இதனைத்தொடர்ந்து 152 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பித்தது ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். இதன் காரணமாக, ரன்னின் வேகம் அதிகரித்தது.அணியின் ரன் எண்ணிக்கை 70 ஆக இருந்த சமயத்தில் தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 27 ரன்னில் வெளியேறினார். அதேபோல அசார் அலி 22 ரன்னும், ஹசன் அலி 17 ரன்னும்அஷ்ரப் 92 பாபர் அசாம் 33 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் தன்னுடைய இன்னிங்சை முடித்துக் கொண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக அல்ஜாரி ஜோசப், ஹோல்டர், உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டும் ப்ரேத்வைட், கெயில் மேயர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிராத்வெயிட், கிரண் பாவெல் அவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அணியின் எண்ணிக்கை 39 ரன்னாக இருந்த சமயத்தில் பாவெல் 23 ரன்னில் வெளியேறினார்.

நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்து இருக்கிறது. பிரைட் 17 ரன்னுடனும், ஆல்ஜாரி ஜோசப் எட்ட ரன்னுடனும், களத்தில் இருக்கிறார்கள். கடைசி நாளில் 280 ரன்கள் எடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரை வெல்வதற்கான முனைப்பில் இருந்து வருகிறது.