கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

0
40
#image_title

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ராஜ்கோட்,
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், 99 ரன்கள் வித்தியாசத்திலும்,இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் என்ற ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
Jeevitha