பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

0
112
Woman inspector arrested for money laundering
Woman inspector arrested for money laundering

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர்  அர்ஷத். 32 வயதான இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரினிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த துறையில் உள்ள அனுபவத்தின் காரணமாக எனது உரிமையாளர் இளையான்குடியில் சொந்தமாக ஒரு கம்பெனி வைக்க உதவி செய்வதாக கூறினார்.

மேலும் அவர் மூலப்பொருள் வாங்குவதற்காக 4 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார். எனவே இதே போல் என்னுடைய அண்ணன் மற்றும் உறவினர்களிடம் கடனாகக் கேட்டு ரூபாய் 6 லட்சம் வரை வாங்கினேன். இந்த பணத்துடன் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மேலும் ஒரு 5 லட்சம் கடன் வாங்குவதற்காக கடந்த ஐந்தாம் தேதி நாகமலை புதுக்கோட்டை மாவு மில் பகுதியில் காத்திருந்தேன்.

அப்போது கடன் தருவதாக கூறிய நபர் பணம் எடுத்துக் கொண்டு வருவதாக கூறி சென்றார். நான் அதே இடத்தில் காத்து இருந்தேன். இதற்கிடையே அப்போது அங்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி நான் தொழில் நிமித்தமாக வைத்திருந்த 10 லட்சத்தையும் பறித்து விட்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது மறுநாள் போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள். உன்னை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் நான் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டபோது நீ கொடுத்த பையில் வெறும் நோட்டுப் புத்தகம் தான் இருந்தது. அதில் பணமில்லை என கூறினார். மேலும் மீண்டும் வந்து நீ பணம் கேட்கும் பட்சத்தில், உன் மீது கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ள எல்லாவற்றையும்  போட்டு வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். எனவே அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் சூப்ரடண்டு சந்திரமவுலிக்கு, பாஸ்கரன் உத்தரவிட்டார். அந்த விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் இதில் பலர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும், இதில் உக்கிரபாண்டியன், பால்பாண்டி, பாண்டியராஜா மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 5 பேர் மீதும் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 226000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை இன்ஸ்பெக்டர் வசந்தியை ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்து விட்டனர். ஆனாலும் அவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தற்போது தனிப்படை இன்ஸ்பெக்டர் வசந்தியை தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர்.