திமுக அரசு தேர்தலின் பொழுது மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் தகுதி வாய்ந்த மகளிற்கள் விண்ணப்பித்தும் அவர்களுக்கு பணம் வரவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும், விரைவில் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது புதிதாக மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முகங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்காத பெண்கள் மீண்டும் விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, 100 நாள் வேலை திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆகியவற்றை கொடுத்து விண்ணப்பிக்கலாம். அரசு இ சேவை மையங்கள் மூலமும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.