இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

Photo of author

By Madhu

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

Madhu

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்காக இலவச சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம்.

இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானிய பணமும் நின்றுவிடும். மோசடியை தடுக்கவும் இத்திட்டத்தின் நன்மைகளில் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டும் சென்றடைய மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்பை கொண்டுவந்துள்ளது. மேலும் 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தகுதியுடையவர்களாக கருதப்படும் நிலையில் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சிலிண்டர்களை பெற முடியும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில் அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். அதற்கு ஆதார் அட்டை ,வங்கி பாஸ் புக், ஆதரவுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், சிலிண்டர் இணைப்பு எண் என இந்த ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தால் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

முதலில் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தை திறக்க வேண்டும். வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் eKYC ஆப்ஷன் இருக்கும் l. அதனை கிளிக் செய்தால் உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் ஆதாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தகவலை உள்ளிட்ட பிறகு ஓடிபி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதனை பதிவிட வேண்டும். இதன் வழிமுறைகள் முடித்த பிறகு செயல்முறை முடிந்து விடும் அருகில் உள்ள சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்திற்கு சென்று ஆதார் கார்டு நகல் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருந்தால் சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.

பெயர் முகவரி, எரிவாயு இணைப்பு எண் மற்றும் ஆதார் எண் போன்றவை அந்த படிவத்தில் சரியாக உள்ளிட வேண்டும். அனைத்து தகவலையும் நிரப்பிய பிறகு ஆவணங்களின் நகலை படிவத்துடன் இணைக்க வேண்டும். இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் பயனாளிகளின் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.