கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!

0
96

திமுக கடந்த தேர்தலின் பொழுது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக மகளிர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது. அதனால் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தகுதி வாய்ந்த மகளிர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 15ஆம் தேதி முதல் முதல்வர் முகாம் நடைபெறும், இந்த முகாமில் கலந்து கொண்டு மீண்டும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கூடுதல் பெண்கள் பயன்பெறும் வகையில் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும் இந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது வரை நான்கு சக்கர வாகனம் இருந்தால் தகுதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை அகற்றப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பெண்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுத் துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

Previous articleஅதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!
Next articleபோதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!