இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்!

0
139

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சாலையில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் விவரப்படி ஆன காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

1. நிறுவனம்: தமிழ் இந்து சமய அறநிலையத்துறை.
2. பணியிடம் : 1
3. பெயர்: பூசாரி
4. கடைசி தேதி: 07.07.2021
5. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பம் அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
6. வயது வரம்பு: 18 முதல் 35 வயதுவரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
7. கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவற்றுடன் ஒரு வருட ஆகமம் கல்வி முடித்து இருக்க வேண்டும். ஆகமம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. சம்பளம்: தெரிவிக்கப்படவில்லை.
9. தேர்வு செயல்முறை: பதிவு செய்தவர்கள் நேர்காணல் முறையின் மூலம் பணி அமர்த்தப்படுவார்கள்.
10. விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து ரூ 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
11. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் மற்றும் திறமையும் உடையவர்கள் 07.07.2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: அலுவலகம் இருப்பு: செயல் அலுவலர், அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், ராஜராஜன் தெரு, திருவண்ணாமலை- 606601.