ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது, ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் அரசு சார்பாக மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் அரசின் பல்வேறு உதவிகளை பெற முடியாத சூழல் உள்ளது, ரேஷன் கார்டு இல்லாமல் பல அரசு திட்ட சலுகைகளை பெற முடியாதவர்கள் இருக்கின்றனர், வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வெவ்வேறு வகைகளாக பிரித்து வழங்குகின்றனர்.
ரேஷன் கார்டு இல்லாமல் இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் அரசிடம் இருந்து வழங்கப்படுகின்றது. இந்த ரேஷன் உதவிகள் பொது விநியோக முறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் உதவிகள் மக்களுக்கு கிடைத்து வரும் நிலையில் கோதுமை பருப்பு, அரிசி சர்க்கரை, எண்ணெய் மட்டுமின்றி வேறு சில உதவிகளும் கிடைக்கின்றது.
ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் உதவிகள் நிறுத்தப்படுவது மட்டுமின்றி வேறு சில திட்டங்களிலும் பயன்பெற முடியாது. அதனால் மகளிர் உரிமைத் தொகை இலவச சிலிண்டர், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயனடைய முடியாமல் இருக்கின்றது.
ரேஷன் கார்டு இல்லை என்றால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியாது. இந்த திட்டத்தின் மூலம் பலன்களை பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ரேஷன் அட்டை இருப்பது கட்டாயம் ரேஷன் கார்டு இல்லாமல் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.
பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் தேவைப்படுபவர்களுக்கு ஐந்து லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம் ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பயன்களை பெற ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம். இந்தத் திட்டத்திற்கான தகுதியை நிரூபிக்க ரேஷன் கார்டு தேவைப்படும்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தினை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம் கார்டு இல்லாவிட்டால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும் என அரசு சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்திருந்தால் விரைவில் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்