அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ என்ற திட்டத்தின் மூலமாக அவசர காலங்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்குகின்றது.. பிஎஃப் தொகையை எடுத்துக் கொண்டால் அது பென்சன் தொகையை பாதிக்குமா என பலரும் சந்தேகத்தில் உள்ள நிலையில் இபிஎப்ஓ என்ற பென்ஷன் திட்டம் அதில் தான் சேர்ந்து செயல்படும் என்பதை அறியவில்லை.
பென்சன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வராது, அதனால் நம்முடைய பிஎஃப் தொகை எடுத்துக் கொண்டால் அது எதிர்காலத்தில் நம்முடைய பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஷன் தொகை தொடர்ந்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் சில நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் அதை திரும்ப பெறவும், புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும்.
இபிஎப் திட்டத்தில் பணியாளரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் பணம் செலுத்தி வரும் நிலையில் நிறுவன பங்களிப்பில் ஒரு பகுதி இ பி எஸ் எனப்படும் பென்ஷன் திட்டத்திற்கு செல்கின்றது. இபிஎப் தொகை வட்டியுடன் சேர்ந்து வரும் தொகையாக உள்ள நிலையில் அதனை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும்.
மேலும் இபிஎப் தொகை நம் ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்கின்றது. அதற்கு வட்டி கிடைக்காது இபிஎப்ஒ திட்டத்தில் பென்ஷன் பெற விரும்பினால் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
58 ஆண்டுகள் நிரம்பியவர் என்றால் முழுமையாக பென்ஷன் பெற முடியும். அதுபோலவே பத்து ஆண்டுகள் பிஎஃப் தொகையை முழுமையாக எடுத்து விட்டால் பென்சன் தொகை தானாகவே சேராது.
இந்நிலையில் பார்ம் 10சி என்பதை கொண்டு இபிஎப் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவத்தை இபிஎப்ஓ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் கேஒய்சி அப்டேட் செய்திருப்பது அவசியம். குறிப்பாக பிஎஃப் தொகையை எடுத்தாலும் இபிஎப் திட்டத்தில் நீங்கள் பென்ஷன் பெரும் உரிமையை இழக்க முடியாது 58 வயதிற்கு பிறகு form 10 D மூலமாக பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்.