இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!

0
121
இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!
நம்மில் சிலருக்கு மூலநோய் இருக்கும். இந்த மூலநோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பலவிதமான மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் போயிருக்கும். பலவிதமான சிகிச்சை பெற்றும் குணம் பெறாத இந்த மூல நோயை ஒரே ஒரு இரவில் குணப்படுத்துவதற்கு அருமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருத்துவம் செய்ய தேவையான பொருட்கள்…
* படிகாரம்
* வாழைப்பழம்
* தேன்
மூலநோயை சரிசெய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை(Pane) வைத்துக் கெள்ள வேண்டும். பாத்திரம் சூடான பிறகு இதில் படிகாரத்தை சிறிது சிறிதாக இடித்து போட்டுக் கொள்ளவும்.
அனைத்து படிகாரமும் கரைந்து பாகு பதத்திற்கு வந்திருக்கும். பின்னர் இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைக்கவும். இது ஆறிய பிறகு இதை ஒரு உரலில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தின் நடுவே சிறிதாக கத்தியை வைத்து கோடு போல அறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து வாழைப்பழத்தில் அறுத்துவிட்ட இடத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். பிறகு இடித்து வைத்துள்ள படிகாரப் பொடியை சிறிதளவு எடுத்து அந்த தேனின் மேல் தூவி விட வேண்டும். மூலநோயை சரி செய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் பொழுது பத்தியத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதிகமாக காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.  தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், மசாலா பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. காரம் சேர்த்துக் கொள்ள கூடாது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும் பொழுதும் மேற்கூறியவற்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மருந்தை வெறும் வயிற்றில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூலநோய் சமீபத்தில் வந்தது என்றால் நீங்கள் இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்தக் கொண்டால் போதும். அதுவே நீண்ட நாட்களாக மூலநேயால் அவதிப்பட்டு வந்தால் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பதிவில் கூறப்பட்டருக்கும் மருந்தை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.