பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

0
210
You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!
You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களில் காலி இடங்கள் உள்ளது.அதனால் உடனே விண்ணபியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளது.அதனால் அதற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு வருகின்றது.

மேலும் மீனவ அறிவியல்,கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இந்த பணிக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகின்றது.தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை ஐந்து மணி வரை விண்ணப்பம் வரவேர்கப்படுகின்றது.மேலும் இந்த விண்ணப்பத்தை உதவி இயக்குனர் அலுவலகம்,மூன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண் 2/601 கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை சென்னை 6001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் விவரங்கள் பெற 04424492719, 9677047014 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K