நயன்தாராவுக்கு 10 ஆண்டு சிறை! வெளிவந்த பரபரப்பு தகவல்!

0
101
10 years in jail for Nayanthara! Exciting information!
10 years in jail for Nayanthara! Exciting information!

நயன்தாராவுக்கு 10 ஆண்டு சிறை! வெளிவந்த பரபரப்பு தகவல்!

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா நானும் ரவுடிதான் படம் மூலம் தெரிய வந்தது. அப்படத்தில் இருந்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.தங்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வந்தனர். இறுதியாக விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து காத்து வாக்குல இரண்டு காதல் படத்தை எடுத்து முடித்தார். அதனையடுத்து ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டனர்.

அதற்கு அடுத்தப்படியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவு ஒன்றை போட்டார். இவர்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் ஆன நிலையில் எப்படி இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கும்? என்று பலர் கேள்வி எழுப்பினர். அப்பொழுது தான் தெரியவந்தது இவர்கள் சரகோசி அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.அவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றால் பல சட்ட திட்டங்கள் உள்ளது. அதையெல்லாம் மீறி தான் இவர்கள் பெற்றுக் கொண்டார்களா, என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக திருமணம் ஆகி என்ன ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும். அதிலும் ஆண் அல்லது பெண் இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த வாடகை தாய் முறையை பின்பற்ற முடியும் என தெரிவித்தனர். இதனால் இவர்கள் விதிமுறைகளை மீறி விட்டார்களா என்ற நோக்கில்  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரை விசாரிக்க அரசு சார்பில் மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் இவர்கள் மட்டும் இன்றி இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆலோசனை கூறிய மருத்துவமனை நிர்வாகத்தையும் விசாரித்து வருகின்றனர். ஏன் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர் என்ற இந்த ஆலோசனை சம்பந்தமாக எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால் பணம் மற்றும் புகழுக்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க நினைத்தால் இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை என்று கூறியுள்ளனர்.விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சட்டத்திற்கு எதிரான விதிமுறைகளை மீறி இருந்தால் இவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.