பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 1400 ஆண் பயணிகள் கைது!!

கிழக்கு ரெயில்வே மண்டலத்தின் ரெயில்களில் பெண்களுக்கு என தனி பெட்டி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 1400  ஆண் பயணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தவர்களை ரெயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தனர்.        இதில் அதிகபட்டசமாக

மால்டாவில் 176 பேர்

ஹவுராவில் 262 பேர்

அசன்சோலில் 392 பேர்

சியால்தாவில் 574 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால் அபாரதம் முதல் சிறைதண்டனை வரை மிகவும் கடுமையாக இருக்கும் என ரெயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இரத்து மேலும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பெண்கள் பெட்டி அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்கிறது. இந்த ரெயில்வே நிர்வாகம் அதிகபடியான பாதுகாப்பு பெண்களுக்கு அளித்து வருகிறது. இதில் தென்னக ரெயில்வே நிர்வாகம் சிறப்பாக செய்பட்டு வருகிறது.