அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

0
74

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையின் மூலம் அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர்கள் கூறினார்கள். 16 வயது சிறுமி கர்ப்பம் ஆக உள்ளதால் மருத்துவர்கள் அருகிலுள்ள ஆவடி மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள அக்கா கணவரான அஜித் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளியானது.

அஜித் என்பவர் தனது மனைவியுடன் செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து கொண்டிருந்தார்.அங்கு, அஜித் மனைவி, அவரது தாய், சகோதரர்கள் மற்றும் 16 வயது தங்கை வேலை செய்து வந்தனர்.

சிறுமியின் சகோதரி, சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுமியை செங்கல் சூளையில் விட்டு விட்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது தனியாக இருந்த சிறுமியை அஜித் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விசாரணையில் உண்மை தெரியவர ஆவடி மகளிர் நிலைய போலீஸார் அஜித்தை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

 

author avatar
Kowsalya