ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கை வசதிகளுடன் கூடிய மடக்கி வைக்கக்கூடிய அளவிலான முன்மாதிரி மருத்துவமனையை உருவாக்கியுள்ளது.

இந்த சிறிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனையை எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். 1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எளிதாக எடுத்து செல்ல முடியும். மேலும் மடக்கி வைத்துவிட்டு விரிக்கும் போது, 4 பேர் உதவியுடன் சில மணி நேரங்களில் இந்த மருத்துவமனையை உருவாக்கி விட முடியும்.

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைகளுக்காக எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடிய 4 மருத்துவமனைகளை அமைக்க, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கும் SCTIMST நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீசித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஐஐடி ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறிய மருத்துவமனைகளை உருவாக்கிவருகிறது.

அதேபோல சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் 30 படுக்கை வசதிகளுடன் அமைக்கவும் உள்ளது. இதேபோன்று 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை கர்நாடகா மாநிலத்திலும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். இது போன்ற மருத்துவமனையை மேலும் சில இடங்களில் துவங்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

Leave a Comment