புனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!! 

Photo of author

By Jeevitha

புனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!! 

Jeevitha

19 people died in the pilgrimage in 13 days!! Shocking information!!

புனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!!

அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது.

இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த குகை கோவில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

மேலும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் ஏப்ரல் 17 முதல் முன்பதிவு தொடங்கி இருந்தது. மேலும்  இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் அமர்நாத் பனி லிங்ககஹ்தை தரிசனம் செய்ய பக்தர்கள் புதிய யாத்திரை பயணத்தை மேற்கொண்டார்கள்.சில நாட்கள் முன்பு யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை யாத்திரை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் அதிகாரிகள் அதிகார்வபூர்வமாக அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது.

அதன்பின் யாத்திரை தொடங்கியது. அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும். மேலும் இதற்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது.

இந்த நிலையில் 13  நாட்களில் இதுவரை 1.62 லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த புனித பயணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளர்கள். மேலும் பகதர்கள் வசதிகளுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது.