காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

0
143
#image_title

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடி தடி மற்றும் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள்,பெண்களை கிண்டல் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 நபர்களை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், சச்சின்,செல்வம்,நரேஷ்,சபரி, சரவணன், கவுதம், அலெக்ஸ், ப்ரீத்தி குமார், வல்லரசு, சூர்யா, விக்னேஷ், தினேஷ், மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 15 பேரை காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் கைது செய்தனர்‌.

அதேபோல சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ், விஜயராகவன், தினேஷ், ஆகிய மூன்று பேரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புட்டா முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.

கைது செய்யப்பட்ட 19 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலை மற்றும் புழல் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.