ஜெயிலர் படத்தின் 2ம் பாகம்… நெல்சன் திலீப்குமாரின் திட்டம்… 

0
29

 

ஜெயிலர் படத்தின் 2ம் பாகம்… நெல்சன் திலீப்குமாரின் திட்டம்…

 

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜேக்கி ஷெரூப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், யூடியூப் ரித்விக், யோகி பாபு, தமன்னா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஜெயிலர் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அனிருத் இசையமைப்பார் என்று தெரிகின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .