40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!!

0
87
#image_title

40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!!

40 வயது ஆனால் பெண்களை ஆன்ட்டி என்று அழிப்பதற்கு கோபத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை பிரியாமணி அவர்கள் வயது மற்றும் தோற்றத்தை வைத்து கேலி செய்வது கண்டித்து சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாரூக்கான் நடித்து இயக்குநர். அட்லி இயக்கத்தில் ரிலீஸ் ஆன ஜவான் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் தோற்றத்தையும் வரையும் வைத்து கேலி செய்யும் நபர்களுக்கு கோபத்துடன். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியாமணி அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகை பிரியாமணி அவர்கள் “ஆண்கள் 40 வயதை கடந்தாலும் அவர்களை யாரும் அங்கிள் என்று அழைப்பது கிடையாது. ஆனால் பெண்களுக்கு அது போல அல்ல. பெண்கள் 40 வயதை கடந்து விட்டால் அனைவரும் ஆன்ட்டி என்று அழைக்கின்றனர்.

இவ்வாறு கேலி செய்பவர்கள் அனைவரும் அதே 40, 50 வயதிற்கு வந்துதான் ஆக வேண்டும். இவ்வாறு வயதை வைத்து கேலி செய்பவர்கள், உருவத்தை வைத்து கேலி செய்பவர்கள் குறித்து நான் கண்டு கொள்வது இல்லை.

நான் என்னுடைய வேலைகளில் மிகவும் கவனமாக இருக்கின்றேன். எனக்கு தற்பொழுது 39 வயது ஆகின்றது. நான். பார்க்க அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றேன். என்னை நான் எப்பொழுதுமே கவர்ச்சியாக உணர்கின்றேன். இதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்களுக்கு இதை புரியவைப்பது என்னுடைய வேலை இல்லை.

முதலில் ஆன்ட்டி என்று அழைப்பது பார்த்து கவலைப்பட்டோன். இப்பொழுது அது போன்ற கேலிகளை கண்டு கவலைப்படுவது இல்லை. அதிலிருந்து மீண்டுவிட்டேன். இது போன்ற கைதிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதும் புரிந்தது” என்று கூறியுள்ளார்.