Tamilnadu Gov: தமிழக அரசு பல்வேறு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு முன் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் நீதிமன்றம் நாடி அவை அனைத்திற்கும் ஒப்புதல் வாங்கினர். நீதிமன்ற வழக்கை அடுத்து தொடர்ந்து ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி சட்டப்பேரவையில் கடன் ரீதியாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றினார். இனிவரும் நாட்களில் கடன் கொடுத்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் துன்புறுத்தி கடனை வசூல் செய்யக்கூடாது. மேற்கொண்டு வசூல் செய்யும் பட்சத்தில் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என வரையறுத்துள்ளனர்.
வரம்பு மீறுபவர்களுக்கு இது இரண்டும் கூட கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கடன் வாங்கியவர்களுக்கு சற்று பொறுமையுடன் கடனை தர சூழல் உருவாகும். குறிப்பாக கடன் பிரச்சனையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் குறையக்கூடும். இந்த கடன் வசூலிக்கும் மசோதாக்கு தான் தற்பொழுது ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கடன் தரும் நிறுவனங்கள் வசூலிக்கும் முறை மாற்றி கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் என பலரிடம் அந்த பொறுப்பை கொடுத்து விடுகின்றனர். இதனால் 1 தவணை கட்ட முடியவில்லை என்றாலும் கடன் வாங்கிவர்களை மிகவும் அவதூறாக பேசி விடுகின்றனர். இதனால் தற்கொலைகள் அதிகரிக்க தொடங்கவே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.