ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளமே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெள்ள தெளிவாக கூறிவிட்டது. ஆனால் தமிழக வருகை புரிந்த மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக ஒன்றிணைந்த கூட்டணியில் தான் ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது ரீதியாக அதிமுக கட்சிக்குள் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது.
ஏதேனும் சலுகைக்காக எடப்பாடி, மறைமுக ஒப்பந்தம் ஏதாவது பாஜக தலைமையில் போட்டு விட்டாரா என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர். ஆனால் எடப்பாடி மீண்டும் கூட்டணிக்காக தான் ஒன்றினைந்திருக்கிறோம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என விவரித்து கூறினார். இவ்வாறு இருக்கும் சமயத்தில் தற்பொழுது அண்ணாமலை மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து நின்ற பத்தொன்பது சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி வைத்து 11.4 சதவீத வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏன் ஒரு சில இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிமுகவை பின்னுக்கும் தள்ளியுள்ளது. சமீப காலங்களில் பாஜகவின் வளர்ச்சியானது அபரிமிதமாக இருப்பதால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சரிக்கு சமமாக தொகுதிகளை கேட்க வேண்டும்.
அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அதில் 70 தொகுதிகளை பாஜக கேட்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி முறையானது தமிழகத்தில் உருவாகும். சட்டமன்றத் தேர்தலில் இதனை செயலுக்கு கொண்டுவரும் பட்சத்தில் அடுத்து 2029 யில் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 இடங்களிலாவது NDA கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதியளித்து கூறியுள்ளார். இவ்வாறு அவர் மோடிக்கே அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.