சீரடி சாய்பாபாவின் 9 வார விரத பூஜை!!

0
110
#image_title

சீரடி சாய்பாபாவின் 9 வார விரத பூஜை!!

சீரடி சாய்பாபா இவரை தமிழ்நாட்டில் அதிக அளவு வணங்கி வருகின்றன காரணம் அவரை வணங்க ஆரம்பித்த நாளிலிருந்து அவர் ஒவ்வொரு பக்தர்களுக்கும் மனநிம்மதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சாய்பாபா வணங்குவதன் மூலமாக தன்னுடைய பக்தர்கள் கேட்கக்கூடிய அத்தனை விஷயங்களை எண்ணங்களையும் செயல்களையும் அவர்களுக்கு நிவர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்.

மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா. அற்புதங்களை சாய்பாபா மட்டும் செய்யவில்லை சீரடியில் உள்ள பலவும் அற்புதங்களால் நிறைந்துள்ளது.

ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.

சாய்பாபாவை வணங்குவதற்கு நாம் செய்யும் உணவு சிறிதளவு எடுத்து சாய்பாபாவிற்கு முன் வைத்து பூஜை செய்வார்கள். இதேபோன்று நம் வீட்டில் சிலைகள் வைத்து கும்பிடும் போது அதற்கும் இவ்வாறு செய்யலாம். சாய்பாபாவின் ஒரு நாளைக்கு நான்கு முறை ஆரத்தி எடுத்து கும்பிட்டு வருகையில் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

ஒன்பது வாரம் சாய்பாபாவை வணங்க முதலில் சாய்பாபா முன்னர் விளக்கேற்றி வைக்கும். பின்னர் ஊதுபத்தி காமித்து நெய் வைத்தியம் வைக்க வேண்டும். நெய் வைத்தியம் என்றால் பழங்கள் இனிப்புகள் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரம் வணங்கி வாருங்கள் நினைத்த காரியங்கள் கட்டாயம் நிறைவேறும்.