ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

0
223

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் நாட்டின் நட்ச் என்ற இடத்தில் ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்ததாக வெளிவந்துள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு எப்படி மரம் முளைக்கும் என்று சிலர் பகுத்தறிவுடன் கேள்வி கேட்ட போதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் கடவுள் சக்தியால் இவ்வாறு மரம் முளைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

எனவே இந்த புகைப்படம் மற்றும் இரு குறித்த வீடியோ இணையதளங்களில் பயங்கர வைரலானது. இதனையடுத்து இந்த காரை பார்க்க நட்ச் பகுதிக்கு பலர் சென்று அந்த காரை பார்த்து அதிசயத்தினர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் புதிய கார் மாடலை அறிமுகம் செய்யும் விளம்பரத்திற்காக செய்த ஆர்ட் வேலை தான் இந்த காரில் இருந்து மரம் முளைத்த விவகாரம் என்பது பின்னர் தெரியவந்தது.

காரை உடைத்து கொண்டு உண்மையாகவே மரம் முளைத்தது போன்று தத்ரூபமாக ஆர்ட் கலைஞர்கள் செய்துள்ளது அதிலும் ஒரே இரவில் இந்த ஆர்ட் வேலையை செய்துள்ளது அந்த பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.

Previous articleவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!
Next articleபிட்ச் சரியில்லை…!போட்டி பாதிலேயே நிறுத்தம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here