60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:!! அத்துமீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!!

0
72

60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:!! அத்துமீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!!

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பொது விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அரசு எச்சரிக்கையை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியொன்று நேற்று 6-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை மரத்திலிருந்த மலைத்தேன் கொட்டியதில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.