பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

0
202

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

பிரசாந்த் நடிக்க இருக்கும் அந்தாதூன் படத்தின் தமிழ் பதிப்பை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது.

நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.  இதையடுத்து அந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

தமிழில் கதாநாயகனாக யார் நடிக்கப் போவது என்ற ரசிகர்களுக்கு சந்தேகம் எழ தனது மகன் பிரசாந்தை அதில் நடிக்க வைக்கப் போவதாக அறிவித்தார். பல ஆண்டுகளாக வெற்றிக்காக பிரசாந்த் இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் இந்த படத்தை பிரபல இயக்குனர் யாராவதுதான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

அதனால் முதலில் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தனது வேறு படங்களின் வேலையில் இருப்பதால் இப்போது அந்த படத்தை  இயக்க மோகன் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களுக்குப் பிறகு  இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதால் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மோகன் ராஜா ரீமேக் படங்களை இயக்குவதில் கில்லாடி எனப் பெயர் பெற்றவர். அவர் இயக்கத்தில் உருவான ஜெயம், எம் குமரன், சம்திங் சம்திம்ங், சந்தோஷ் சுப்ரமண்யம் மற்றும் தில்லாலங்கடி ஆகிய படங்கள் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !
Next articleதாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here