மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டயமாக்கபட்டுள்ளது.அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு கண்டுகொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அரசானது கால அவகாசம் வழங்கி வந்தது.
இதனை எதிர்த்து வந்த புகாரில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மின்சார மானியம் வழங்கப்படாது என அரசானது அறிவித்துள்ளது. ஆனால் இதற்கான விதிகள் எந்த சட்டத்திலும் குறிப்பிடவில்லை என அறிவித்துள்ளனர். மானியம் பெற ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில தொகுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் ஆதார் எண் இணைப்பு பணிகள் இடையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தக்கூடாது.ஆதார் எண்ணை இணைக்க வரும் பக்தர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும்.கூட்ட நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் கவுண்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என முன்னதாகவே அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனால் இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காத மக்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.