National

பெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு

பெங்களூரின் முக்கிய பகுதியான ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென பைசா நகரத்து கோபுரம் போல் சாய்ந்து நிற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து கோபுரத்தை உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் பெங்களூரில் இந்த கட்டிடம் சாய்ந்து இருப்பதை பார்த்து அதன் அருகில் செல்லவே அருகில் செல்லவே அச்சப்பட்டு எல்லோரும் திகிலுடன் பார்த்து வருகின்றனர்

ஐந்து மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் இருப்பதாகவும் அதில் சுமார் 35 பேர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டிடம் சாய்ந்த தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த வீட்டிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்

அதுமட்டுமின்றி அந்த வீட்டிற்கு எதிரில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எந்த நேரமும் இந்த கட்டிடம் சாயம் முழுவதுமாக சரிந்து விழும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

https://twitter.com/yessirtns/status/1225070700144148480

சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

ரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்

Leave a Comment