’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

0
211

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி சுரங்கத்தில் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யை பயமுறுத்த ஆளும் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டதாக அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினர் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருவது பெரும் பரப்பு ஏற்படுத்தியுள்ளது

Previous articleகொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!
Next articleதர்பார் தோல்வியால் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here